'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தில் பல சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும், வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்த காளகேயர்கள் என்கிற அம்சமும், அவர்கள் பேசுவதாக அமைக்கப்பட்ட கிளிக்கி மொழி பாஷையும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
குறிப்பாக குழந்தைகளிடம் இந்த கிளிக்கி மொழி ரொம்பவே பிரபலமானது. அதுமட்டுமா..? கொடூரமான உருவத்துடன் காளகேயர் பாஷை பேசிய அந்த காளகேயர் தலைவனை..? உடல் மொழியிலும் வசனத்திலும் தன்னை ஒரு காளகேயனாகவே மாற்றியிருந்த அந்த நடிகர் தான் பிரபாகர் என்பவர். அந்த கிளிக்கி பாஷைக்கும் தனது வித்தியாசமான உச்சரிப்பால் உயிர் கொடுத்தவர்.
தற்போது அவருக்கு தெலுங்கில் இருந்து மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்துள்ளது. அதுவும் மம்முட்டி படத்தில்.. 'பரோல்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை அறிமுக இயக்குனரான சரத் சந்தித் என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தில் மம்முட்டி சிறைக் கைதியாக நடிக்கிறார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள இந்தப்படத்தின் கதையை அஜித் பூஜப்புரா என்பவர் எழுதியுள்ளார்.