தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கேட்பதற்கு கொஞ்சம் தமாஷாகத் தான் இருக்கும், ஆனால் அதுதான் உண்மை. 25 வருடங்களுக்கு முன் கவுண்டமணி-செந்தில் காமெடிகளில் அனைவராலும் ரசிக்கப்பட்ட காமெடிகளில் ஒன்று தான் இன்சூரன்ஸ் காமெடி. அதில் செந்தில் தான் இறந்துவிட்டதாக நடித்து தன்னுடைய இன்சூரன்ஸ் பணத்தை கவுண்டமணி மூலம் பெற முயற்சிப்பார், இறுதியில் அவர்கள் குட்டு உடைபட்டு விடும்.. இதே வேலையை ஒருத்தர் நிஜத்தில் வயலன்ஸ் ஆக செய்தால்..? அதாவது தான் தற்கொலை பண்ணிக்கொள்ளாமல் இன்னொருவரை எரித்து தான் இறந்தது போல நம்ப வைத்தால்..? இப்படிப்பட்ட கிரிமினல் ஒருவனின் கேரக்டரில் தான் துல்கர் சல்மான் அடுத்ததாக நடிக்க இருக்கிறார்
ஆம், 1984ல் கேரளாவில் புகழ்பெற்ற கொலை வழக்கு தான் சாக்கோ கொலை வழக்கு. சுகுமார குறூப் என்கிற கிரிமினல் தன்னுடைய இன்சூரன்ஸ் பணம் 8 லட்ச ரூபாயை குறுக்கு வழியில் பெறுவதற்காக தான் இறந்துவிட்டதாக நாடகமாட, தன்னைப்போலவே இருந்த சாக்கோ என்பவரை உயிருடன் காரில் வைத்து எரித்துக்கொன்றான். பின்னாளில் விசாரணையில் இந்த உண்மை தெரியவந்தது. ஆனாலும் போலீஸில் அவன் சிக்கவில்லை.. முப்பது வருடங்களுக்கு முன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றதாக சொல்லப்படும் அவனை குறித்த தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த சுகுமார குறூப் கேரக்டரில் தான் துல்கர் சல்மான் நடிக்க இருக்கிறாராம். சினிமாவுக்காக இந்த கேரக்டரில் சில மாற்றங்களை செய்திருக்கிறார்களாம். 'செகண்ட் ஷோ' படம் மூலம் துல்கரை சினிமாவில் அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார்.