பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சரைனோடு படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் டிஜே துவ்வட ஜெகன்னாதம். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கும் இந்த படத்தை ஹரீஸ் சங்கர் இயக்குகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். காமெடி கதையில் தயாராகியுள்ள இந்த படம் வருகிற ஜூன் 23-ந்தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தை அடுத்து அல்லு அர்ஜூன் நடிக்க உள்ள படத்திற்கு நா பேரு சூர்யா என்ற தலைப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ஜூன் 14-ந் தேதி வெளியாகிறது. அன்றைய தினமே படம் தொடங்குகிறது. இப்படத்தை ரேஸ்குர்ரம், கிக், டெம்பர் உள்பட பல படங்களை இயக்கிய வம்ஸி இயக்குகிறார். மேலும், ராணுவ சிப்பாயாக அல்லு அர்ஜூன் நடிக்கும் இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு காஷ்மீர் மற்றும் இந்தியாபாகிஸ்தான் எல்லை பகுதிகளில் நடைபெறுகிறது.