ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான பிரேமம் தமிழ் ரசிகர்களிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்றது. தமிழில் ரீமேக்காகாவிட்டாலும் கூட இதை தெலுங்கில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டிய நாகசைதன்யா 'பிரேமம்' என்கிற பெயரிலேயே ரீமேக் செய்து நடித்தார்.. ஆனால் நாகசைதன்யா மட்டுமல்லாமல் அதில் மலர் டீச்சராக நடித்த ஸ்ருதிஹாசன் முதற்கொண்டு ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகினர். இந்தநிலையில் பிரேமம் ரீமேக் செய்ய விரும்பும் இயக்குனர்களுக்கு மலையாளத்தில் அதை இயக்கிய அல்போன்ஸ் புத்ரன் வித்தியாசமான நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.
பிரேமம் படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காக பாலிவுட்டின் டாப் ஐந்து நிறுவனங்கள் அவரை அணுகினார்களாம். அதில் இரண்டு நிறுவனங்கள் தங்களிடம் மிகச்சிறந்த இயக்குனர்கள் இருப்பதாகவும், பிரேமம் படத்தை மிகச்சிறப்பாக கொண்டு வந்துவிடுவோம் என கூறினார்களாம். தற்போது அல்போன்ஸ் புத்ரன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா.? இந்தப்படத்தை இயக்கும் வரை நான் கன்னித்தன்மை கொண்டவனாகவே இருந்தேன். அதனால் படத்தில் காதல் உணர்வுகளை சரியாக பிரதிபலிக்க முடிந்தது. இந்தப்படத்தின் சிறப்பே, படத்தின் எந்த காட்சியையும் பர்பெக்சன் அல்லாமல் எடுத்தது தான். அதனால் இந்தப்படத்தை ரீமேக் செய்து இயக்குபவர்கள் 31 வயதானாலும் கூட கன்னித்தன்மை இழக்காதவர்களாக இருந்தால் படம் இன்னும் சிறப்பாக வரும்.