ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கதாநாயகர்களாக இருக்கும் அப்பாவும் மகனும் சேர்ந்து நடிப்பது ரொம்பவே அபூர்வமான நிகழ்வு.. இந்திய திரையுலகை எடுத்துக்கொண்டால் வெகு சிலருக்கே அந்த பாக்கியம் கிடைத்துள்ளது. தமிழில், சிவாஜி-பிரபு, சத்யராஜ்-சிபிராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மலையாள திரையுலகில் கூட இந்த சாதனை நிறைவேற்றப்படாமலே இருக்கிறது. இப்போது மம்முட்டி-துல்கர் சல்மான் என தந்தை மகன் இருவருமே மலையாள சினிமாவில் கதாநாயகர்களாக பீக்கில் இருப்பதால் இவர்களால் இந்த சாதனை நிகழக்கூடும் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது..
கடந்த இரண்டு வருடங்களில் இவர்கள் இருவரும் அவ்வப்போது இணைந்து நடிப்பது குறித்து பேசப்பட்டு, அதன்பின் அந்த செய்தி அப்படியே அமுங்கிப்போய் விடுவதுதான் வாடிக்கையாக இருக்கிறது. இந்தநிலையில் மம்முட்டி தற்போது 395 படங்களில் நடித்து முடித்துவிட்டார். தற்போது மூன்று படங்களில் நடித்தும் வருகிறார். அனேகமாக இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட துவக்கத்தில் அவரது 400வது படம் ஆரம்பிக்கப்பட்டு விடும். ஒரு ஹீரோவுக்கு 400வது படம் என்பது மிகப்பெரிய மயில் கல். அதனால் அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த படத்தில் தனது தந்தையுடன் துல்கர் சல்மான் இணைந்து நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.