டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தற்போது நாகசைதன்யாவுக்கு ஜோடியாக தெலுங்கில் 'ராராண்டோய் வெடுக்க சூடம்' என்கிற படத்தில் நடித்துள்ளார் ராகுல் பிரீத் சிங்.. இந்தப்படத்தில் தனது கேரக்டர் பற்றி கூறியுள்ள ராகுல் பிரீத் சிங், “மற்ற படங்களைப்போல வெறும் கதாநாயகியாக வந்தோம், போனோம் என்றில்லாமல் நாயகன் நாகசைதன்யாவுக்கு இணையாக எனது கதாபாத்திரம் அமைந்திருக்கிறது” என சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார்.. தற்போது இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ள நிலையில் தனது கேரக்டர் குறித்து விரிவாக பேசியுள்ள ராகுல் பிரீத் இந்தப்படத்தின் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணாவை எச்சரித்துள்ளதாகவும் கூறினார்.
இந்தப்படத்தில் ராகுலின் கதாபாத்திரத்தின் பெயர் பிரம்மரம்பா.. இதுநாள் வரை தான் நடித்த படங்களில் தனது கேரக்டர்களின் பெயர்கள் ஒன்றிரண்டு மட்டுமே ஞாபகத்தில் இருக்கின்றன என கூறிய ராகுல் பிரீத் சிங், இந்தப்படத்தின் கேரக்டர் எனக்கு என்றென்றும் மறக்காமல் நினைவுடன் இருக்கும். வெறும் பெயருக்காக மட்டுமல்ல, இத்தனை நாட்களில் நான் நடித்த படங்களில் இதுபோன்ற ஒரு கேரக்டர் எனக்கு கிடைக்கவே இல்லை” என கூறியுள்ளார். அப்படி ஒரு கேரக்டரை எனக்கு கொடுத்த இயக்குனர் கல்யான் கிருஷ்ணாவிடம் “உங்களது அடுத்த படத்திலும் நான் தான் கதாநாயகியாக நடிப்பேன்.. வேறு யாரையும் ஒப்பந்தம் செய்யக்கூடாது என எச்சரித்துள்ளேன்” என கூறியுள்ளார் ராகுல் பிரீத் சிங்.