டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள திரையுலகில் சமீப நாட்களாகவே பெண்கள், குறிப்பாக நடிகைகள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வந்த ஒரு விஷயத்துக்கு இப்போது வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆம், திரையுலகில் உள்ள பல்வேறு அமைப்புகளில் உள்ள பெண்களையும் இணைத்து பெண்கள் நல அமைப்பை துவங்கியுள்ளனர். இதில் மஞ்சு வாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.
அதுமட்டுமல்ல சில கோரிக்கைகளை வலியுறுத்தி கேரள முதல்வரையும் சந்திக்கின்றனர். பெண்கள் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும், அவர்களது பிரச்சனைகளை தீர்க்கவும் தான் இந்த அமைப்பை ஆரம்பித்துள்ளனராம்.. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளானதை தொடர்ந்து, வெறும் பேச்சாக இருந்த இந்த விஷயத்தை அமைப்பாக மாற்றுவதில் தீவிரம் காட்டி இப்போது அதை சாதித்தும் காட்டியுள்ளனர்.