ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை அபர்ணா பாலமுரளி. ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா படத்தின் மூலம் அறிமுகமானவர். மகிஷ்திண்டே பிரதிகாரம் படத்திற்காக நிறைய விருதுகள் வாங்கியிருக்கிறார். அவர் அறிமுமமான தமிழ் படம் 8 தோட்டாக்கள். படமும், படத்தில் அமிர்தாவின் நடிப்பும் பேசப்பட்டது. ஆனால் அடுத்து வாய்ப்பு வரவில்லை. இன்னும் வரவில்லை. இதற்கிடையில் மலையாளப் படத்தில் ஆட்டோ டிரைவராக நடிக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: 8 தோட்டாக்கள் படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால் அவையெல்லாம் சாதாரண கேரக்டர்கள். ஹீரோவை காதலிப்பதை தவிர வேறு வேலையில்லாத கேரக்டர்கள். அதனால் அவற்றை தவிர்த்து விட்டேன். நான் பெரிய ஹீரோயின் இல்லை. நல்ல பெர்பாமர், அதற்கு ஏற்ற கேரக்டர்களை தேடுகிறேன். அது விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
மலையாளத்தில் நடித்த எல்லா படங்களுமே எனக்கு நல்ல பெயரை தந்திருக்கிறது. விருதுகளையும் கொடுத்திருக்கிறது. இப்போது கூட திரிச்சிவப்பேரூர் கிலிப்தம் என்ற படத்தில் ஆட்டோ டிரைவராக நடிக்கிறேன். இந்த படமும் எனக்கு விருதுகளை பெற்றுத் தரும் என்கிறார்கள். இப்படி ஒரு வாய்ப்பு தமிழிலும் அமையும் என்று நம்புகிறேன்" என்கிறார் அபர்ணா பாலமுரளி. திருசிவப்பேரூர் கிலிப்தம் படத்தை ரத்தீஷ்குமார் இயக்குகிறார் ஆஷிப் அலி ஹீரோ.