இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் 'ஸ்பைடர்' படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. அங்கு பிபி நகர் பகுதியில் அமைந்துள்ள நிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வந்தது. ஆனால், அந்த மருத்துவமனைக்கு சரியான வசதிகளைச் செய்து தராத காரணத்தால், உள்ளூர் கட்சியினர் படப்பிடிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். அதனால், படப்பிடிப்பிற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
பாதியிலேயே படப்பிடிப்பை முடித்துக் கொண்ட குழுவினர் எஞ்சியுள்ள காட்சிகளை சென்னையில் படமாக்க முடிவு செய்தனர். இதையடுத்து படக்குழுவினர் சென்னைக்கு பயணித்துள்ளனர். ஹைதராபாத்தில் படமாக்க வேண்டிய காட்சிகளை, சென்னையில் படமாக்க ஆரம்பித்துள்ளார்கள். இந்தக் கடைசிகட்டப் படப்பிடிப்புடன் 'ஸ்பைடர்' படத்தின் படப்பிடிப்பு நிறைவுறுகிறது.
படப்பிடிப்பு திட்டமிட்ட நாட்களைக் கடந்தும் நடைபெற்று வருவதால், ஜுன் மாதம் 23ம் தேதி வெளியாவதாகச் சொல்லப்பட்ட இப்படத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதம் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளிவந்துள்ளன.