ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் பெங்களூர் நாட்கள் படத்தில் நடித்த ராணா, பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் வில்லனாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்காக தனது உடல்கட்டை கம்பீர தோற்றத்துக்கு மாற்றி நடித்திருந்தார் ராணா. தெலுங்கு படங்களில் நாயகனாக நடித்து வந்தபோதும், பாகுபலி மூலம் அதிரடி வில்லனாகவும் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார்.
இந்நிலையில், கைதி நம்பர் 150 படத்தை அடுத்து தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் ஒரு அதிரடியான வில்லன் வேடம் உள்ளதாம். அதில் ராணா நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சிரஞ்சீவி படம் என்றதும் டபுள் ஓகே சொல்லிவிட்டாராம் ராணா. வருகிற ஆகஸ்ட் 22-ந்தேதி சிரஞ்சீவியின் பிறந்த நாளன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.