தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மாநகரம் படத்தில் நம் மனம் கவர்ந்த ஜோடியான 'சந்தீப்-ரெஜினா இருவரும் தற்போது தெலுங்கில் 'நட்சத்திரம்' என்கிற படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப்படத்தை பிரபல இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கியுள்ளார். ஆம், நடிகை ரம்யா கிருஷ்ணாவின் கணவரே தான். இவர் ரெஜினா குறித்து சமீபத்தில் கூறுகையில், “இந்தப்படத்தில் ரெஜினாவுடன் இணைந்து பணியாற்றிய பொழுது, என் மனைவியின் (ரம்யா கிருஷ்ணனின்) யங்கர் வெர்ஷன் தான் ரெஜினா என்பதை கண்டுகொண்டேன்' என புகழ்ந்துள்ளார்.
இந்தப்படத்தில் ரெஜினா ஒப்பந்தமானதுமே, ரெஜினாவின் நட்பு வட்டாரத்தில் இருந்த சிலர், கிருஷ்ண வம்சி தனது பட நாயகிகளை அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க வைத்து விடுவாரமே உஷாராக இருந்துக்கோ என பயமுறுத்தினார்களாம்.. ஆனால் இப்போது, “என்ன அப்படிப்பட்ட காட்சியில் நடித்தியா என கேட்டால், அப்படியா ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படி ஏதும் தெரியவில்லை.. ஒருவேளை படம் வந்தபின் தான் அப்படிப்பட்ட காட்சிகள் வந்திருக்கிறதா என பார்க்க வேண்டும்” கழுவுற மீனில் நழுவுற மீனாக பதிலளித்துள்ளாராம் ரெஜினா.