டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த சில நாட்களாக மீடியாக்களில் நடிகை பார்வதி தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்றும், தயாரிப்பாளர்கள் ஒரு கோடி ரூபாய் வரை கொடுத்து அவரை தங்களது படங்களில் ஒப்பந்தம் பண்ண முயற்சிக்கிறார்கள் என்றும் செய்தி ஓடிக்கொண்டு இருக்கிறது.. பார்வதி அடுத்ததாக இந்திப்படத்தில் நடிக்கிறார் என்பதால் அந்த ரேஞ்சுக்கு சம்பளமும் உயர்ந்துவிட்டதாக (உயர்த்திவிட்டதாக) சொல்லப்பட்டது.. ஆனால் இந்த தகவலில் துளியும் உண்மை இல்லை என கோபத்துடன் மறுத்துள்ளார் பார்வதி..
இதுகுறித்து பார்வதி கூறுகையில், “கடந்த சில நாட்களாக நான் சம்பளத்தை உயர்த்தி விட்டதாகவும் ஒரு கோடி ரூபாய் வாங்குவதாகவும் சில் செய்திகளை படித்து அதிர்ச்சியடைந்தேன்.. முதலாவது நான் வாங்கும் சம்பளம் எனது தனிப்பட்ட விஷயம்.. எனக்கும் தயாரிப்பளருக்கும் மட்டுமே தெரிந்த விஷயம்.. நான் இப்போது எவ்வளவு சம்பளம் வாங்குகிறேன் என்றே தெரியாத உங்களால், எப்படி நான் சம்பளத்தை கூட்டியுள்ளதாக சொல்ல முடிகிறது தயவுசெய்து இதுபோன்று என்னை பற்றிய செய்திகள் வெளியிடுவதாக இருந்தால் என்னிடம் ஒருவார்த்தை கேட்டு விட்டு அதை வெளியிடுங்கள்” என வேண்டுகோள் வைத்துள்ளார் பார்வதி..