பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள நடிகர்களில் பலரும் ஷூட்டிங் இல்லாத நாட்களில் சொந்த வேலைகளை பார்க்கும்போது, இளம் முன்னணி நாயகன் துல்கர் சல்மான் மட்டும் சமூக நிகழ்வுகளுக்கு அதில் பெரும்பகுதி நேரத்தை ஒதுக்கி விடுகிறார்.. அப்படித்தான் சமீபத்தில் கொச்சியில் உள்ள எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமத்திற்கு (SOS Children Village Kerala) சென்று அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகளுடன் நிறைய நேரம் செலவிட்டு அவர்களை மகிழ்வித்துள்ளார்..
எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம் என்பது, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை கண்டறிந்து, அவர்களை படிக்கவைத்து பாதுகாக்கும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும்.. இங்குள்ள குழந்தைகளுக்கு துல்கர் சல்மானை ரொம்பவே பிடிக்கும் என்பதால், நிர்வாகத்தினர் அதை துல்கர் சல்மானிடம் கோரிக்கையாக வைத்தனர்.. அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட துல்கர் சல்மான் அங்கே வந்து குழந்தைகளை மகிழ்வித்து சென்றுள்ளார்.