டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'கசபா' என்கிற படத்தில் நடித்ததன் மூலம் மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார் வரலட்சுமி சரத்குமார். அதை தொடர்ந்து சமுத்திரக்கனி மலையாளத்தில் இயக்கும் 'அப்பா' ரீமேக்கான 'ஆகாச மிட்டாயி' படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர், தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப்படத்தில் இருந்து விலகினார்.. ஆனால் விலகியதும் ஒருவகையில் நல்லதற்குத்தான் என்பது போல மீண்டும் மம்முட்டி நடிக்கும் புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பு வரலட்சுமியை தேடி வந்தது..
மம்முட்டியை வைத்து 'ராஜாதி ராஜா' படத்தை இயக்கிய அஜய் வாசுதேவ் என்பவர் இயக்கம் இந்தப்படத்தில் மம்முட்டி ஸ்ட்ரிக்ட்டான காலேஜ் புரபெஷராக நடிக்க, ஐ.பி.எஸ் அதிகாரி பவானி துர்கா வேடத்தில் வரலட்சுமி நடிக்கிறார்.. கல்லூரியில் மாணவர்களின் இரு பிரிவுகளுக்குள் ஏற்படும் மோதலை தொடர்ந்து வரலட்சுமி கல்லூரிக்குள் நுழையவேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் அதை தொடர்ந்து அவர் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுமாக அவரது கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளதாம். 'புலி முருகன்' என்கிற சூப்பர்ஹிட் படத்திற்கு கதை எழுதிய உதயகிருஷ்ணா தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதுகிறார்.