விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா |
தெலுங்கு சினிமாவின் பிதாமகனாக கருதப்படும் கே.விஸ்வநாத்துக்கு மத்திய அரசு திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இந்த விருது அவருக்கு தாமதாக வழங்கப்பட்டிருப்பதாக சிரஞ்சீவி கருத்து தெரிவித்துள்ளார். விருது அறிவிக்கப்பட்ட கே.விஸ்வநாத்தை, அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து சொன்னார் சிரஞ்சீவி. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கே.விஸ்வநாத் மகத்தான படைப்பாளி, அவர் தெலுங்கு சினிமாவின் சொத்து. அவருக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த விருது அவருக்கு எப்போதோ வழங்கப்பட்டிருக்க வேண்டும். தாமதமாகத்தான் இப்போது அறிவித்திருக்கிறார்கள். ஆயினும் அதற்கான காரணத்தை தேட விரும்பவில்லை. இந்த தருணத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருப்பது பொருத்தமானது. விஸ்வநாத்துக்கு வழங்கப்பட்டிருப்பதால் தாதா சாஹேப் பால்கே விருது முழுமை அடைந்திருக்கிறது. அவருக்கு கிடைத்த விருதால் தெலுங்கு திரையுலகம் பெருமை கொள்கிறது. அவரது குடும்ப நணபர் என்ற முறையில் எங்கள் குடும்பமும் பெருமை கொள்கிறது. என்றார்.