டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வரும் ஏப்-28ஆம் தேதி 'பாகுபலி-2' மிக பிரமாண்டமாக ரிலீஸாக இருக்கிறது. கேரளாவிலும் 'பாகுபலி' ஜுரம் அதிகமாகியுள்ளதால் வழக்கத்தை விட அதிகமாக, சுமார் 300 தியேட்டர்களில் இந்தப்படம் வெளியாகிறது. இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபாஸ், நேற்று கேரளாவில் கொச்சியில் உள்ள பத்திரிகையாளர்களை சந்தித்து 'பாகுபலி-2' குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன் கமால் ரஷீத் கான் என்கிற பாலிவுட் நடிகர், 'மகாபாரதம்' படத்தில் பீமனாக மோகன்லால் நடிப்பதை கிண்டலடித்ததுடன் பீமனாக நடிக்க பிரபாஸ் தான் பொருத்தமான தேர்வு என்றும் மேதாவித்தனமாக கூறியிருந்தார். இதுபற்றி பிரபாஸிடம் பத்திரிகையாளர்கள் கேட்டனர்..
அதற்கு பதிலளித்த பிரபாஸ், “சந்தேகமே இல்லாமல் மோகன்லால் ஒரு மிகச்சிறந்த நடிகர்.. ஒருவேளை அவரால் ஏதோ ஒரு காரணத்தால் நடிக்க இயலாமல் ஏதாவது ஒரு படத்திலிருந்து விலகினார் என்றால் அந்த கேரக்டரில் நடிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என கூறியுள்ளார்.. இதிலிருந்து மோகன்லாலுக்கு பின்னர்தான் தன்னைப்போன்றவர்கள் என்பதை மறைமுகமாக கூறியுள்ளார் என்றே தெரிகிறது.