மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
நாகசைதன்யா நடிப்பில், 'ராராண்டோ வெடுக்க சூடம்' என்கிற படம் விரைவில் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. ராகுல் பிரீத் சிங், லாவண்யா திரிபாதி இருவரும் கதாநாயகிகளாக நடிக்க ஜெகபதிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நாகார்ஜுனாவை வைத்து, இரண்டு வருடங்களுக்கு முன் 'சோக்காடே சின்னி நாயனா' என்கிற ஹிட் படத்தை கொடுத்து இயக்குனராக அறிமுகமான கல்யாண் கிருஷ்ணா தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நாகார்ஜுனாவே இந்தப்படத்தை தயாரித்தும் உள்ளார்.
இந்தப்படத்தின் எடிட்டிங் பணிகள் நடைபெற்றபோது, நாகார்ஜுனா எடிட்டிங் டேபிளில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக அமர்ந்து படத்தை இன்ச் பை இன்ச்சாக செதுக்கியுள்ளாராம். சில காட்சிகளை ரீஷூட் பண்ண சொன்னதாகவும் தகவல்.. இதுபற்றி சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நாகார்ஜுனாவிடம் கேட்கப்பட்டது.. ஆனால் இதற்கு நேரடியாக பதில் சொல்லாத நாகார்ஜுன், “கடந்த இரண்டு வாரங்களாக இந்தப்படத்தின் எடிட்டிங்கில் பிசியாக இருந்தேன்.. பைனல் அவுட்புட் எனக்கு திருப்தி என தோன்றிய பின்தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பையே ஏற்பாடு செய்ய சொன்னேன்.. உண்மையிலேயே படம் நன்றாக வந்துள்ளது” என கூறியுள்ளார் நாகார்ஜுனா.