அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்.. அதாவது தெலுங்கு சினிமாவில் பவன் கல்யாண் அடியெடுத்து வைத்த சமயம்.. அவரது இரண்டாவது படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் நடிகை மந்த்ரா. இங்கே தமிழில் விஜய், அஜித் படங்களிலும் நடித்த இவருக்கு தெலுங்கு திரையுலகில் ராசி என்பது தான் பெயர். சமீபத்தில் பவன் கல்யாணை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்துள்ளார் மந்த்ரா. திடீரென இவர் பவன் கல்யாணை சந்தித்ததன் காரணம் பற்றி அவரே கூறியுள்ளார்.
தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு பவன் கல்யாணை சந்திக்க வந்தாராம் மந்த்ரா. அவர் வந்துள்ள விஷயம் கேள்விப்பட்டு வாசலுக்கே வந்து உள்ளே அழைத்துசென்ற பவன் கல்யாண், குழந்தையை தனது மடியில் வைத்து விளையாடிபடியே சுமார் அரைமணி நேரம் மந்த்ராவுடன் பழைய விஷயங்கள், குடும்ப நிலவரங்கள் குறித்து பேசிக்கொண்டு இருந்தாராம்.
மந்த்ரா குழந்தையின் பிறந்தநாளை சாக்காக வைத்துக்கொண்டு பவன் கல்யாணை சந்திக்க வந்தாலும், அவர் வந்தது வேறொரு விஷயமாகவாம். மந்த்ரா தான் தற்போது தயாரித்து வரும் 'லங்கா' என்கிற படத்திற்கு பவன் கல்யாணின் ஆதரவை கேட்டு தான் வந்தாராம். நாளை (ஏப்-21) இந்தப்படம் ரிலீஸாகிறது. பவன் கல்யாண் தனக்கு ஆதரவு அளிப்பது தெரிந்தால் பணம் போட்ட பைனான்சியர்கள் சற்றே மரியாதையாக இன்னும் கொஞ்சநாள் காத்திருப்பார்கள் என்றும், படத்திற்கும் நல்ல பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் பவன் கல்யாணை சந்தித்தாராம் மந்த்ரா என்கிற ராசி.