ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
எம்.டி.வாசுதேவன் நாயரால் மகாபாரத கதையை தழுவி எழுதப்பட்ட ரண்டமூழம் நாவல், 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமான முறையில் திரைப்படமாக 'மகாபாரதா' என்கிற பெயரில் தயாராக இருக்கிறது.. இதில் மோகன்லால் பீமனாக நடிக்கிறார். 2018ல் ஆரம்பித்து 2020ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகிவிட்டது.. ஆனால் இந்தப்படத்தை எடுப்பதற்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது கேரளாவில் உள்ள சங் பரிவார் அமைப்பு..
இதுபற்றி சங் பரிவார் கூறியுள்ளதாவது, “எம்.டி.வாசுதேவன் நாயர் மனதில் தோன்றியதெல்லாம் மகாபாரதம் ஆகிவிடமுடியாது.. ஆயிரம் கோடி என்ன பத்தாயிரம் கோடி பட்ஜெட்டில் எடுத்தால் கூட ரண்டமூழம், மகாபாரதம் ஆகாது. அது மகாபாரதத்தின் ஒரு பகுதி என்றும், அடுத்த தலைமுறைக்கு தவறாக சொல்லப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தப்படத்திற்கு மகாபாரதா என டைட்டில் வைத்ததை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கைகளை தொடர உள்ளோம்” என கூறியுள்ளனர்..