சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி |
கடந்த வாரம் மலையாளத்தில் ரஞ்சித் டைரக்சனில் மம்முட்டி நடித்த புத்தன் பணம் என்கிற படம் வெளியானது. இந்தப்படத்தில் கதாநாயகியாக இனியா நடித்துள்ளார்.. மம்முட்டிக்கு ஜோடியாக மனைவி கேரக்டரில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் வரும் கேரக்டரில் வேறு சிறிய நடிகை நடித்திருந்தார். இன்னும் சில காட்சிகளில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக ஷீலு ஆப்ரஹாம் என்பவர் நடித்திருந்தாலும், இவர்களை தாண்டி பிரதான ஹீரோயினாக இனியாவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்தப்படத்தில் கோழிக்கோட்டில் வசிக்கும் சுந்தரி என்கிற தமிழ்ப்பெண் கேரக்டரில் நடித்திருந்தார் இனியா.. இந்தப்படத்தில் மம்முட்டியுடன் கூடவே வரும் கதாபாத்திரமான மம்முக்கோயா என்கிற காமெடி நடிகர் இனியா பற்றி ஒருவரிடம் விசாரிப்பார்.. அதற்கு அந்த நபர்.. “ஓ..அவளை கேட்கிறீர்களா.. அவள் தான் சுந்தரி.. தமிழத்தி..” என்பார்.. அதற்கு மம்முக்கோயா.. பார்த்தா சுந்தரி (அழகி) மாதிரி தெரியலையே.. ரொம்ப ஆவரேஜா தானே இருக்கா” என்று சொல்லி சிரிப்பார்.. இது இனியாவை மட்டம் தட்டுவதற்காக வைக்கப்பட்ட வசனமா இல்லை இனியா தமிழ்ப்பெண்ணாக நடித்ததால் அவரை கிண்டலடிப்பதற்காக வைக்கப்பட்ட வசனமா என்பதற்கு இயக்குனர் ரஞ்சித் தான் விளக்கம் சொல்லவேண்டும்..
ஆனால் அதேசமயம் இனியாவின் மகனாக வரும் எட்டாம் கிளாஸ் படிக்கும் பரதனை தனுஷின் தீவிர ரசிகனாக காட்டியிருப்பதிலும், படத்தில் 'மாரி' படத்தின் பாடலையும் பின்னணி இசையையும் ஆங்காங்கே உள்ளே நுழைத்திருப்பதிலும் தமிழ்ப்பெருமையும் பாடியுள்ளார் ரஞ்சித்.