டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பஞ்சாபி பெண்ணான வாமிகா இந்தி படங்களில் அறிமுகமாகி அதன்பிறகு சொந்த மொழியான பஞ்சாபி படங்களில் நடித்து வந்தார். பாலே மன்ஞ்சி ரோஜு என்ற தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவரை கவனித்த இயக்குனர் செல்வராகவன், தன் மனைவி கீதாஞ்சலி இயக்கிய மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடிக்க வைத்தார்.
அந்தப் படத்தில் வாமிகாவின் நடிப்பு பேசப்பட்டது. ஆனால் படத்தின் கதையில் டபுள் ஏ இருந்ததால் படம் ஓடவில்லை. இதனால் நிறைய கனவுகளோடு தமிழ் சினிமாவுக்கு வந்த வாமிகாவுக்கு ஏற்பட்டது ஏமாற்றமே. ஒரு வருடம் கையில் படம் இல்லாமல் இருந்த வாமிகாவுக்கு மலையாள திரையுலகம் கைகொடுத்துள்ளது.
இந்தியில் சல்மான்கான் நடித்த சுல்தான் படம் மாதிரியான ஒரு மல்யுத்த படம் மலையாளத்தில் தயாராகிறது. படத்தின் பெயர் கோதா. இந்தப் படத்தில் வாமிகா மல்யுத்த வீராங்கணையாக நடிக்கிறார். இதற்காக அவர் முறையாக மல்யுத்தம் கற்று இந்தப் படத்தில் நடித்து வருகிறார். பசில் ஜோசப் இயக்கும் இந்தப் படத்தில் டொவினோ தாமஸ் சிக்ஸ்பேக் வைத்து மல்யுத்த வீரராக நடிக்கிறார். அஜூ வர்கீஸ், ரெஞ்சி பணிக்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்கிறர், ஷான் ரஹ்மான் இசை அமைக்கிறார். பஞ்சாபி பெண்ணான வாமிகா இந்தப் படத்தில் அதிதி சிங் என்ற பஞ்சாபி பெண்ணாகவே நடிப்பது குறிப்பிடத்தக்கது.