சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
பதினான்கு பிளாப் படங்களுக்குப்பின் ஒரு அதிரடி வெற்றியை பெற்றதாலோ என்னவோ, தனது அடுத்த படத்தை ரிலீஸ் செய்ய வெகு நிதானம் காட்டியுள்ளார் நடிகர் ஜெயராம். கடந்த வருடம் மே மாதம் வெளியான ஜெயராமின் ஆடு புலியாட்டம்' படம் நூறு நாட்களை கடந்து ஓடியது. அதை தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளியில் அவரது அடுத்த படமான 'சத்யா' வரும் ஏப்-20ல் ரிலீஸாகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புவரை கூட இந்தப்படம் வெளியாவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாத நிலையில் இப்போது ஒருவாரமே இருக்கும் நிலையில் திடீரென ரிலீஸ் தேதியை அறிவித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்கள்.
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நரைத்த தாடியுடன் ஜெயராம் புதிய தோற்றத்தில் நடித்துள்ள இந்தப்படத்தில் ரோமா, பார்வதி நம்பியார் கதாநாயகிகளாக நடிக்க, காமெடி நடிகர் அஜூ வர்கீஸ், இயக்குனர் மேஜர் ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார் ஏ.கே.சாஜன். இவர் கடந்த வருடம் மம்முட்டி-நயன்தாரா நடிப்பில் வெளியான 'புதிய நியமம்' படத்தின் இயக்குனரும் கூட. இந்தப்படம் இப்போது ரிலீஸுக்கு தயாராகி நிலையில் இந்தப்படத்தை இயக்கிய இயக்குனர் தீபன் கடந்த மாதம் காலமானது குறிப்பிடத்தக்கது.