பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பெங்களூரு, தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில், கன்னடத் திரையுலகத்துக்கு பல்வேறு பிரிவுகளில், ஐந்து தேசிய விருதுகள் கிடைத்துள்ளதால், கன்னட திரையுலகினர் குஷி அடைந்துள்ளனர்.
கடந்த, 2016ம் ஆண்டு திரைப்படங்களுக்கான, 64வது தேசிய விருதுகள், டில்லியில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில், கன்னட திரையுலகினர் பெருமைப்படும் வகையில் ஐந்து தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. ஜனவரியில் வெளியான, அல்லம்மா திரைப்படத்தின், சிறந்த ஒப்பனை கலைஞருக்கான விருது, எம்.கே.ராமகிருஷ்ணா, சிறந்த இசையமைப்பாளர் விருது, பாபு பத்மநாபா ஆகியோர் பெறுகின்றனர்.இயக்குனர் டி.எல். நாகாரபரணா கூறுகையில், மறைந்த ஹரிகோடே தயாரித்துள்ள, அல்லம்மா, 12ம் நுாற்றாண்டை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டதாகும்.
இப்படத்துக்கு, சிறந்த படம் அல்லது சிறந்த இயக்குனர் விருது கிடைக்குமென எதிர்பார்த்தேன். இருப்பினும், சிறந்த ஒப்பனை மற்றும் சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது பெருமைக்குரியது, என்றார். ஸ்ரீஹரிகோடே தயாரித்துள்ள அனைத்து கன்னட படங்களும் ஏதாவது ஒரு வகையில் தேசிய விருது பெற்றுள்ளது.
இசையமைப்பாளர் பாபு பத்மநாபா கூறுகையில், இப்படத்துக்கு இசையமைக்க, இரண்டாண்டு எடுத்து கொண்டேன். இதற்காக, ஹரி பிரசாத் சவுராசியாவின், 800க்கும் மேற்பட்ட வசன கவிதைகளை ஆய்வு செய்து, இறுதியில், 18 கவிதைகளை படத்துக்கு தேர்வு செய்தேன், என, உற்சாசகத்துடன் கூறினார்.
திரையுலகிலிருந்து ஓய்வு பெறும் எண்ணத்தில் இருந்த எனக்கு, சிறந்த ஒப்பனைக்கான விருது கிடைத்தது, மகிழ்ச்சியாக உள்ளது. 12ம் நுாற்றாண்டில் வாழ்ந்த மக்களை நினைவுபடுத்தி ஒப்பனை செய்ய எடுத்து கொண்ட சிரமத்துக்கு கிடைத்த பரிசாகவே கருதுகிறேன், என, ஒப்பனை கலைஞர் ராமகிருஷ்ணா கூறினார்.
சிறந்த குழந்தை நட்சத்திரமாக, ரயில்வே சில்ரன் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, மனோகரா என்ற சிறுவனும்; சிறந்த மாநில மொழி படமாக, ரிசர்வேஷன் என்ற கன்னட படமும், சிறந்த மாநில மொழி படமாக துளு மொழியில் வெளியான, மடிப்பு என்ற படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ரிசர்வேஷன் பட இயக்குனர் மஞ்சு கூறுகையில், என் முந்தைய இரு படங்களுக்கும் விருதுகள் கிடைக்குமென எதிர்பார்த்தேன். இந்த ஆண்டு கிடைத்துள்ள விருதை, என் தாயார் லலிதாவுக்கு காணிக்கை ஆக்குகிறேன், என்றார்.
மடிப்பு பட இயக்குனர் சேத்தன் முன்டடி, விருதை எதிர்பார்க்கவில்லை. என் முதல் படமே, தேசிய விருது பெற்றிருப்பது பெருமையாக உள்ளது. இந்த படம் இந்து - முஸ்லிம் இடையே நல்லுவை விளக்கும் கதையமைப்பு கொண்டதுடன், துளு கலாசாரத்தையும் விளக்குகிறது, என்றார்.