மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மலையாள சினிமாவுடன் எந்த விதத்திலாவது தொடர்பில் இருக்க வேண்டும் என நினைப்பவர் கன்னட நடிகர் சிவராஜ்குமார். தான் நடித்த 'மைத்ரி' படத்தில் எந்த ஈகோவும் பார்க்காமல் மோகன்லாலை இணைத்துக் கொண்டவர். அதுமட்டுமல்ல தற்போது மோகன்லாலின் சூப்பர் ஹிட்டான 'ஒப்பம்' படத்தின் கன்னட ரீமேக்கில் கண்பார்வையற்றவராக நடித்து வருகிறார் சிவராஜ்குமார். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப்பின் அவர் நடிக்கும் மலையாள ரீமேக் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையெல்லாம் விட இன்றைய இளம் நடிகர்களில் தன்னை கவர்ந்தவர் என்றால் அது துல்கர் சல்மான் தான் என்றும் தான் அவரது தீவிர ரசிகன் என்றும் குறிப்பிட்டுள்ளார் சிவராஜ்குமார். இன்றைக்கு வளர்ந்து வரும் புதிய நடிகர்களில் துல்கர் சல்மானை போன்ற திறமையான ஒருவரை நான் பார்த்ததில்லை, அவர் ஏற்று நடிக்கும் கேரக்டர்களில் அவரது நடிப்பு என்னை பிரமிக்க வைக்கிறது” என பாராட்டியுள்ளார்.