ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் ராஜீவ் ரவி டைரக்சனில் 'கம்மட்டிப்பாடம்' என்கிற படம் வெளியானது. ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமாக, அதேசமயம் அதிர்ச்சி தரும் விதமாக, துல்கர் சல்மான் நடித்த படங்களில் முதன் முதலாக 'ஏ' சான்றிதழ் பெற்ற படமாக இது அமைந்தது. துல்கர் சல்மான் உட்பட இதில் நடித்திருந்த வினாயகன், அவரது அண்ணனாக நடித்த மணிகண்டன் ஆச்சாரி உட்பட பலரும் கதையின் நாயகர்களாக வாழ்ந்திருந்தார்கள். படத்தை பார்த்த பலரும், ஸ்டைலிஷான கதைகளில் நடித்துவரும் துல்கர், இதுபோன்ற ஒரு கதைக்களத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார் என்கிற சந்தேகத்தை எழுப்பவும் தவறவில்லை.
ஆனால் தற்போது, இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு துல்கருக்கு முன்னதாக பஹத் பாசிலைத்தான் தேடிச்சென்றது என்றும் அவர் மறுத்த காரணத்தால் தான் அடுத்ததாக துல்கர் சல்மான் இந்தப்படத்திற்குள் வந்தார் என்கிற உண்மையும் வெளியாகியுள்ளது. இதை வெளிப்படுத்தியவரும் பஹத் பாசிலேதான்.. பஹத் பாசிலை வைத்து 'அன்னயும் ரசூலும்' படத்தை இயக்கி அவருக்கு ஒரு லைப் டைம் கொடுத்த இயக்குனர் ராஜீவ் ரவி, இந்தப்படத்திற்கும் பஹத் பாசிலைத்தான் முதலில் அணுகினாராம்.
ஆனால் ராஜீவ் ரவி சொன்ன கதையில் கதைக்களமான கொச்சி நகரத்தில் கதையில் சொல்லப்பட்டது போன்ற இடங்களை எல்லாம் தான் ஒருபோதும் பார்த்தது கூட இல்லை என்பதாலும் தனக்கு நினைவு தெரிந்து தான் பார்த்த கொச்சி நகரம் ஹைடெக் வீடுகளும் கட்டடங்களுமாகவே தான் இருந்தது என்பதால் அந்தப்படத்துடன் தன்னால் ஒன்றி நடிக்க முடியாது என்றுதான் மறுத்துவிட்டாராம் பஹத் பாசில்.