ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் ஆட்களை பார்த்திருக்கிறோம். ஆனால் அட்வான்ஸாக மன்னிப்பு கேட்கும் ஆட்களை பார்த்திருக்கிறீர்களா..? வேறெங்கும் போக வேண்டாம்.. நம்ம வெள்ளாவி பொண்ணு டாப்ஸியே அதற்கு சிறந்த உதாரணம். நாம் சொல்ல வரும் விஷயம் டாப்ஸி நடித்துள்ள 'நாம் ஷபானா' படத்தை பற்றியது, பாலிவுட்டில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் உளவுத்துறை சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார் டாப்ஸி. இந்தப்படத்தில் மனோஜ் பாஜ்பாயி, டேனி டென்சொங்பா ஆகியோர் நடித்து இருந்தாலும் கூட படத்தின் பிரதான வில்லனாக நடித்திருப்பவர் நடிகர் பிருத்விராஜ் தான்.
இவர் இன்டர்நேஷனல் கிரிமினல் டோனி என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். டாப்ஸியின் முக்கிய வேலையே பிருத்விராஜை தேடிக்கண்டுபிடித்து, அவர் தரும் டார்ச்சர்களை தாங்கி, அவரது கேரக்டருக்கு ஒரு முடிவை கொண்டு வருவது தான். இதனால் பிருத்விராஜை டாப்ஸி திட்டுவது போலவும், அவருடன் சண்டை போடுவது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கூறியுள்ள டாப்ஸி, “பிருத்விராஜ் ரசிகர்களே.. படம் பார்த்தபின் தயவு செய்து என்னை கொல்வதற்காக தேடாதீர்கள்” என முன்கூட்டியே மன்னிப்பு கேட்கும் விதமாக தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள பிருத்விராஜ், “கவலைப்படாதே.. டோனியாலேயே உன்னை கொல்ல முடியவில்லை எனும்போது வேறு யாராலும் முடியாது” என தமாஷாக குறிப்பிட்டுள்ளார்.