டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நீண்ட நாட்களெல்லாம் ஆகவில்லை மம்முட்டி போலீஸ் யூனிபார்ம் அணிந்து கடந்த வருடம் தானே அவர் போலீஸ் அதிகாரியாக நடித்த 'கசபா' படம் வெளியானது. கூடவே அவருக்கு 'கசப்பான' அனுபவங்களையும் தந்துவிட்டது. ஆம், அந்தப்படத்தில் அவர் வில்லன் இல்லை என்று சொல்லாலமே தவிர, கிட்டத்தட்ட கெட்ட குணங்களுடைய ஒரு கண்டிப்பான, நேர்மையான, அதேசமயம் அராஜகமான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். படம் வெளியான பின்னர் கேரளாவில் மாதர்சங்க அமைப்புகள் மம்முட்டிக்கு எதிராக கொடி பிடித்து கோஷம் போடும் அளவுக்கு அந்த கேரக்டர் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்தது.
மக்களிடம் தனது போலீஸ் கேரக்டர் குறித்த பாசிடிவான எண்ணத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என மம்முட்டி நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அவரை அணுகி ப்ரெஷ்ஷான போலீஸ் கதை ஒன்றை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஷாம்தத்.. ஆம்.. 100 நாட்கள் ஓடிய சூப்பர்ஹிட் படமான 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்து இப்போது இயக்குனராக மாறியிருக்கும் அதே ஷாம்தத் தான்.. இந்தப்படத்தில் மம்முட்டிக்கு இன்வெஸ்டிகேஷன் போலீஸ் அதிகாரி வேடமாம். அதிரடியான க்ரைம் த்ரில்லர் படமாக இது உருவாக இருக்கிறதாம்..