இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் வயதான ஒரு பெண்மணி பேசும் வீடியோ ஒன்று வைரலாக உலா வந்தது.. அந்த வீடியோவில் பேசிய பெண்மணி, தனக்கு மோகன்லாலை மிகவும் பிடிக்கும் என்றும் அவரை நேரில் பார்க்க ஆவலாக இருப்பதாகவும், திருவனந்தபுரத்தில் இருக்கும் தன்னை நேரம் இருந்தால் மோகன்லால் வந்து சந்திப்பாரா என்றும் ஏக்கத்துடன் பேசியிருந்தார்.. யாரோ ஒரு இளைஞர்தான் இவரது ஏக்கத்தை வீடியோவாக மாற்றி சமூக வலைதளத்தில் பரவவிட்டுள்ளார்..
இந்த வீடியோ எப்படியோ மோகன்லாலின் கவனத்துக்கும் சரியான நபர்களால் கொண்டுபோகப்பட்டது. இதனை பார்த்து நெகிழ்ந்துபோனார் மோகன்லால்.. தற்போது பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் வில்லன் பட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் தான் நடந்து வருகிறது. வீடியோவில் பேசிய பெண் அங்குள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் வசித்து வருகிறார். இன்று கலை நேராக அங்கே சென்ற மோகன்லால், அந்த வயதான பெண்மணியை நேரில் சந்தித்து சந்தோஷத்தில் அவரை திக்குமுக்காட வைத்துவிட்டார்.. சிறிது நேரம் அவருடன் பேசி செலவிட்டு, அதன்பின்னரே ஷூட்டிங்கிற்கு கிளம்பிச்சென்றார் மோகன்லால்.