கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் |
இன்றைய தேதியில் தமிழ்சினிமா இயக்குனர்களின் மோஸ்ட் வான்டட் எழுத்தாளர்களில் முதல் சாய்ஸ் ஆக இருப்பவர் இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் தான்.. ஷங்கர், மணிரத்னம் உட்பட ஜாம்பவான்கள் எல்லாம் தங்களது படத்தின் கதை உருவாக்கத்தில், வசனத்தில் ஜெயமோகனின் பங்கு இருக்கவேண்டும் என்பதை அதிகம் விரும்புகின்றனர்.. தற்போது ஷங்கர்-ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள '2.O' படத்திலும் ஜெயமோகனின் பங்கு கணிசமாக உள்ளது.. தமிழில் மட்டுமல்லாது மலையாளத்திலும் ஜெயமோகனுடன் இணைந்து பயணிக்க விரும்புகிறார்கள் சில இயக்குனர்கள்..
அந்த வகையில் விருதுகள் பல பெற்ற 'ஒளிமுறி' படத்திற்கு கதை எழுதிய ஜெயமோகன், தொடர்ந்து 'காஞ்சி', ஒன் பை டூ' உட்பட சில படங்களில் கதை எழுதினார்.. தற்போது 'என்னு நிண்டே மொய்தீன்' வெற்றிக்கூட்டணியான ஆர்.எஸ்.விமல்-பிருத்விராஜ் இருவரும் மீண்டும் இணையும் வரலாற்றுப்படமான 'கர்ணன்' படத்தில் ஜெயமோகன் தனது பங்களிப்பை தந்து வருகிறார்.. இவையெல்லாவற்றையும் விட ஜெயமோகனுக்கு உள்ள இன்னொரு ஆசை என்னவென்றால், சி.வி.ராமன் பிள்ளை எழுதிய தர்மராஜா என்கிற நூலை அருமையான திரைக்கதையாக்கி வைத்திருக்கிறாராம்.. இந்த கதையில் மம்முட்டி நடிக்கவேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாம். மம்முட்டி ஒகே சொல்லிவிட்டால் இது திரைப்படமாவதற்கான வேலைகள் ஆரம்பித்துவிடும் என எதிர்பார்ப்புடன் இருக்கிறாராம் ஜெயமோகன்.