ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சேதுராம ஐயர் கதாபாத்திரத்தில் மம்முட்டி நான்கு படங்களில் நடித்ததுபோல, மேஜர் மகாதேவன் கேரக்டரில் மோகன்லால் நான்கு படங்களில் நடித்துபோல் இவர்களுக்கு சமமமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆக மாறவிருக்கிறார் மலையாள ஆக்சன் கிங் சுரேஷ்கோபி. ஆம், சுரேஷ்கோபிக்கும் இப்படி ஒரு வரலாறு இருக்கத்தான் செய்கிறது. 1994ல் சுரேஷ்கோபி நடிப்பில் 'கமிஷனர்' என்கிற படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ரெஞ்சி பணிக்கர் கதை எழுத ஷாஜி கைலாஷ் இந்தப்படத்தை இயக்கியிருந்தார்..
கமிஷனர் படத்தில் சுரேஷ்கோபி ஏற்றிருந்த 'பரத் சந்திரன் ஐ.பி.எஸ்' கேரக்டர் ரசிகர்களின் மனதில் நிலைத்து நின்றுவிட, 11 வருடங்கள் கழித்து அதாவது 2005ல் அந்த கேரக்டர் பெயரிலேயே அதன் இரண்டாம் பாகமாக 'பரத் சந்திரன் ஐ..பி.எஸ்' படம் வெளியானது. அதுவும் சூப்பர் ஹிட், இதன் கதையை எழுதியதோடு ரெஞ்சி பணிக்கரே படத்தை இயக்கி இயக்குனராகவும் அறிமுகமானார். அதன்பின் மூன்றாவது முறையாக இந்த கேரக்டருக்கு உயிர் கொடுக்க நினைத்த ரெஞ்சி பணிக்கரும் ஷாஜி கைலாஷும் ஒரு வித்தியாசமான முயற்சியை செய்தார்கள்..
அதாவது ஏற்கனவே மம்முட்டி நடிப்பில் ஹிட்டான 'தி கிங்' மற்றும் சுரேஷ்கோபியின் 'பரத் சந்திரன் ஐ.பி.எஸ்' ஆகிய இரண்டு கதாபாத்திரங்களையும் இணைத்து 'தி கிங் அன்ட் கமிஷனர்' என்கிற பெயரில் 2012ல் படமாக எடுத்தனர். ஆனால் முந்தைய இரண்டு பாகங்களைப்போல இதற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தநிலையில் இப்போது நான்காம் முறையாக பரத் சந்திரன் ஐ.பி.எஸ்., கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ளாராம் கதாசிரியர் ரெஞ்சி பணிக்கர். அரசியலில் பிசியாக இருக்கும் சுரேஷ் கோபியும் கூட இதற்கு சம்மதம் தந்துவிட்டாராம்.