டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திலீப் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராக இருக்கும் படம் தான் 'ஜார்ஜேட்டன்ஸ் பூரம்'.. மார்ச் இறுதியில் இந்தப்படத்தை வெளியிடும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.. கேள்விப்பட்ட தகவல்கள் உண்மையாக இருக்குமானால் இந்தமுறை மம்முட்டி நடித்துள்ள 'தி கிரேட் பாதர்' படத்துடன் திலீப்பின் இந்தப்படமும் ஒரே நாளில் மோத வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.. ஆனால் நாம் சொல்லப்போகும் விஷயம் அதுவல்ல..
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை பாவனாவுக்கு நடைபெற்ற கொடுமையான நிகழ்வின் பின்னணியில் திலீப் இருப்பதாக சிலர் செய்தி பரப்பினார்கள் அல்லவா.?. நேற்றுமுன் தினம் நடைபெற்ற இந்த 'ஜார்ஜேட்டன்ஸ் பூரம்' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அது பற்றி குறிப்பிட்டு தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் திலீப்..
சம்பந்தப்பட்ட நிகழ்வில் என்னை சம்பந்தப்படுத்தி ஒரு ஆங்கில பத்திரிகை தவறாக எழுதப்போக, மற்ற சில மஞ்சள் பத்திரிகைகளும் அதையே பின்பற்றி என்மீது அவதூறு பரப்பின. நான் அப்படி கீழ்த்தரமான காரியத்தை செய்யவேண்டிய அவசியம் எனக்கு இல்லவே இல்லை.. சம்பந்தப்பட்ட நடிகையுடன் அந்த சமயத்தில் நானும் கூட தொடர்பு கொண்டு ஆறுதல் அளித்தேன்.. கடவுள் சத்தியமாக எனக்கும் அந்த நிகழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என கண்கலங்காத குறையாக பேசியுள்ளார் திலீப்..