பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள திரையுலகை பொறுத்தவரை மிக வலுவான கேரக்டரை கொண்ட ஸ்கிரிப்ட்டை உருவாக்கும் எந்த இயக்குனருக்கும் மோகன்லாலை நடித்தால் நன்றாக இருக்குமே, அவரை அணுகித்தான் பார்ப்போமே என்பதுதான் விருப்பமாக இருக்கும்.. ஆனால் அப்படி எத்தனை கதைகளை கேட்பதற்கு மோகன்லாலுக்கு நேரமிருக்கும்.. அதையும் தாண்டி எத்தனை பேருக்கு மோகன்லால் வாய்ப்பு தந்துவிட முடியும்..? நேற்று முன்தினம் வெளியாகி வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் 'வீரம்' படத்தின் இயக்குனர் ஜெயராஜுக்கும் அந்த அனுபவம் தான் நடந்துள்ளது..
பிரபல மலையாள இயக்குனர் ஜெயராஜ் இயக்கிய இந்த வீரம் படத்தில் பாலிவுட் நடிகரான குணால் கபூர் தான் ஹீரோவாக நடித்துள்ளார். அதனால் மலையாளத்தில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் இந்தப்படம் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தின் கதை நாயகனாக 'சந்து சேகவர்' என்கிற வரலாற்று கேரக்டரில் மோகன்லால் நடித்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்து, அவரிடம் முழு ஸ்கிரிப்ட்டையும் கொடுத்துவிட்டு வந்தாராம் ஜெயராஜ்.. “ஆனால் அதன்பிறகு பல மாதங்களாக மோகன்லால் எந்த ஒரு பதிலும் சொல்லவே இல்லை.. அதனால் தான் குணால் கபூரை ஹீரோவாக்கி படத்தை எடுத்தேன்” என வருத்ததுடன் கூறியுள்ளார் ஜெயராஜ்..