இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தெலுங்கு சினிமா உலகின் பாரம்பரிய குடும்பம் அக்னினேனி நாகேஸ்வரராவ் குடும்பம். அவரது மகன் நாகார்ஜுனா தெலுங்கு சினிமாவில் அசைக்க முடியாத சக்தி. அவரது மகன்கள் நாக சைதன்யாவும், அகிலும் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள். நாக சைதன்யா நாகார்ஜுனின் முதல் மனைவியின் மகன். அகில், இரண்டாவது மனைவி நடிகை அமலாவின் மகன். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நாகசைதன்யாவும், நடிகை சமந்தாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படட்டது. அதற்கு முன்னதாக அகிலுக்கும் பேஷன் டிசைனர் ஸ்ரேயா பூபாலுக்கும் திருமணம் நிச்சயமானது. இரண்டுமே காதல் திருமணங்கள்தான்.
நாக சைதன்யா - சமந்தா திருமண நிச்சயதார்த்தத்தைவிட அகில்-ஸ்ரேயா நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்தது. காரணம் ஸ்ரேயா ஆந்திராவின் பிரபல தொழிலதிபர் ஜி.வி.கே ரெட்டியின் பேத்தி. இரு குடும்பங்களும் சம்மதித்து தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஸ்ரேயாவின் குடும்பம் இத்தாலியில் வசித்து வருவதால் மே மாதம் இத்தாலியில் திருமணத்தை முடித்து விட்டு அந்த மாதத்தின் இறுதியில் ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவதாக திட்டம். இதற்காக உறவினர்கள், நண்பர்கள் 700 பேரை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல தனி விமானம் புக் செய்யப்பட்டிருந்தது. இத்தாலியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றை அப்படியே வாடகைக்கு எடுத்து வைத்திருந்தார்கள்.
இந்த நிலையில் திருமண நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அறிவித்திருக்கிறார்கள். அதோடு திருமணத்திற்கு அழைத்தவர்கள் ஒவ்வொருத்தரையும் தனித்தனியாக போனில் தொடர்பு திருமணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இத்தாலிக்கு கிளம்ப வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
திருமணம் ரத்துக்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. திருமணத்துக்கு முன்பு அகிலும், ஸ்ரேயாவும் பல இடங்களுக்கு ஜாலி சுற்றுலா சென்றிருக்கிறார்கள். இதில் ஏதோ ஒரு விஷயத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனால் பிரிகிறார்கள் என்பது ஒரு காரணம்.
மணமகள் ஸ்ரேயா பெரும் கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் வரதட்சணையாக சில சொத்துக்களை அகில் பெயருக்கு நாகார்ஜுனா குடும்பம் எழுதிக் கேட்டதாகவும் அதற்கு ரெட்டி குடும்பம் மறுத்துவிட்டதாகவும் இதனால் திருமணம் தடைபட்டதாகவும் இன்னொரு கருத்து நிலவுகிறது.
சினிமா நடிகருடன் திருமணம் வேண்டாம் என்ற ரெட்டி குடும்பம் ஸ்ரேயாவை வற்புறுத்தி வந்தாகவும் அதுசரி என்று ஸ்ரேயா முடிவு செய்ததால் கருத்து வேறுபாட்டை உண்டாக்கி பிரிந்து விட்டதாகவும் கூறுகிறார்கள். உண்மையான காரணம் என்ன என்று நாகார்ஜுனா சொன்னால்தான் தெரியும். ஆனால் அவர் சொல்லப்போவதில்லை. இந்த திருமண ரத்து ஆந்திரா சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.