சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
விளையாட்டு வினையாக போய்விடும் என்று சொல்லப்படுவது உண்டு.. கேரளாவில் அப்படித்தான் ஒரு சிறுவனின் விளையாட்டு இன்னொரு சிறுமியின் கண் பார்வையை பறித்துள்ள சோக நிகழ்வு அரங்கேறியுள்ளது.. மோகன்லால் நடித்த 'புலி முருகன்' படம் தான் இதற்கு காரணமாக அமைந்ததுள்ளது என்பது அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கும் செய்தி. 'புலி முருகன்' படத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த சிறுவர்கள், ஏன் சிறு குழந்தைகள் கூட, படத்தில் இடம்பெறும் புலியை வேட்டையாடும் அவரது பிரத்யேக ஸ்டைல் ஒன்றை அடிக்கடி செய்துகாட்டும் நிகழ்வுகள் சோஷியல் மீடியாவை நிறைத்து வருகின்றன..
அப்படித்தான் ஆழப்புழாவில் உள்ள ஒரு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மோகன்லால் வேல் எறிந்து புலியை கொள்வது போல 'புலி முருகன்' பாணியில் கையில் இருந்த இரும்புக்கம்பியை புலியை நோக்கி வீசுவதுபோல வீசியுள்ளான்.. ஆனால் அவன் வைத்த குறி, அந்த இரும்புக்கம்பி அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ரோஷன் மேரி என்கிற 9 வயது சிறுமியின் கண்களை தாக்கியதில் அந்த சிறுமி படுகாயம் அடைந்தார்.