தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விளையாட்டு வினையாக போய்விடும் என்று சொல்லப்படுவது உண்டு.. கேரளாவில் அப்படித்தான் ஒரு சிறுவனின் விளையாட்டு இன்னொரு சிறுமியின் கண் பார்வையை பறித்துள்ள சோக நிகழ்வு அரங்கேறியுள்ளது.. மோகன்லால் நடித்த 'புலி முருகன்' படம் தான் இதற்கு காரணமாக அமைந்ததுள்ளது என்பது அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிக்கும் செய்தி. 'புலி முருகன்' படத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த சிறுவர்கள், ஏன் சிறு குழந்தைகள் கூட, படத்தில் இடம்பெறும் புலியை வேட்டையாடும் அவரது பிரத்யேக ஸ்டைல் ஒன்றை அடிக்கடி செய்துகாட்டும் நிகழ்வுகள் சோஷியல் மீடியாவை நிறைத்து வருகின்றன..
அப்படித்தான் ஆழப்புழாவில் உள்ள ஒரு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் மோகன்லால் வேல் எறிந்து புலியை கொள்வது போல 'புலி முருகன்' பாணியில் கையில் இருந்த இரும்புக்கம்பியை புலியை நோக்கி வீசுவதுபோல வீசியுள்ளான்.. ஆனால் அவன் வைத்த குறி, அந்த இரும்புக்கம்பி அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ரோஷன் மேரி என்கிற 9 வயது சிறுமியின் கண்களை தாக்கியதில் அந்த சிறுமி படுகாயம் அடைந்தார்.