'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இரண்டாம் உலகப்போரை மையப்படுத்தி இயக்குனர் க்ரிஷ் இயக்கிய கஞ்சே திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் தேசிய விருதையும் வென்றது. அப்படத்திற்கு பின்னர் பாலகிருஷ்ணா நடிப்பில் கௌதமிபுத்ர சடர்கனி எனும் சரித்திர திரைப்படத்தை இயக்குனர் க்ரிஷ் இயக்கியிருந்தார். பொங்கலுக்கு திரைக்கு வந்த அத்திரைப்படம் குறுகிய காலகட்டத்தில் பிரம்மாண்ட வடிவமைப்பில் உருக்கப்பட்டிருந்ததால் பல தரப்பிலும் பாராட்டைப் பெற்றது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் சரித்திர திரைப்படங்களை இயக்க க்ரிஷ் ஆர்வம் கொண்டுள்ளார். ஏற்கனவே தெலுங்கில் வெற்றி கண்ட கிருஷ்ணதேவராயர் மன்னனின் வாழ்க்கை வரலாறு மற்றும் கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு இவற்றை திரைப்படங்களாக இயக்க க்ரிஷ் திட்டமிட்டுள்ளாராம். மேலும் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிப்பில் ஹிந்தி திரைப்படம் ஒன்றை இயக்கவும் க்ரிஷ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றாராம்.