தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பொதுவாக எந்த ஒரு பிரபல ஹீரோ என்றாலும் படப்பிடிப்பின் பொது தங்களது ஷாட் முடிந்ததும் அருகில் உள்ள கேரவனுக்குள் புகுந்து விடுவார்கள். இன்னும் சிலர் ஸ்பாட்டிலேயே ஏதாவது ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டு புத்தகம் படிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் மலையாள சூப்பர்ஸ்டாரான மோகன்லால் 'புலி முருகன்' பட ஷூட்டிங்ஸ்பாட்டில் செய்த காரியம் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை ஷாக் அடிக்க செய்திருக்கிறது.
விஷயம் இதுதான், 'புலி முருகன்' படத்தின் தொண்ணூறு சதவீத காட்சிகள் மலை சார்ந்த காட்டுக்குள்ளே தான் படமாக்கப்பட்டன. இதனால் புரொடக்சன் ஆட்கள் படப்பிடிப்பிற்கு தேவையான சாதனங்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றி வைக்கும் வேலைகள் எல்லாம் சாதாரண இடங்களை விட, இங்கே சிரமமாக இருக்கும். அந்த சமயத்தில் ஒரு ஷாட் முடிந்ததும் ஓய்வெடுக்க போகாத மோகன்லால் என்ன செய்தார் தெரியுமா..?
தான் நடித்து வந்த காட்சிக்கான உடையிலேயே (டவுசர்-பனியன்) பள்ளத்தில் இருந்த நபர்களிடம் சாதனங்களை வாங்கி மேலே இருப்பவர்களிடம் சாதாரண வேலையாட்கள் பேசுவதுபோல ஜாலியாக உரையாடிக்கொண்டே கைமாற்றி விட ஆரம்பித்தார். இந்த காட்சியை அந்த சமயத்தில் வீடியோவாக எடுத்த யாரோ இப்போது அதை சோஷியல் மீடியாவில் பதிவேற்றிவிட செம வைரல் ஆகியிருக்கிறது அந்த வீடியோ. ஒரு சாதாரண தொழிலாளியைப்போல மோகன்லால் இறங்கி வேலை செய்யும் அந்த காட்சியை பார்த்து சந்தோஷத்தில் ஷாக்காகி போயிருக்கிறார்கள் மோகன்லால் ரசிகர்கள்.