தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த ஒரு மாத காலமாக கேரளாவில் புதிய படங்களை திரையிட விடாமல் நடைபெற்ற தியேட்டர் அதிபர்களின் கூட்டமைப்பு நடத்திய வேலை நிறுத்தத்தால் மலையாள சினிமா சற்று முடங்கியது என்னவோ உண்மைதான்.. அதனால் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக வேண்டிய நான்கு பெரிய படங்களின் ரிலீஸும் கேள்விக்குறியாகின.. ஒருவழியாக ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்ததும் துல்கர் நடித்த 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' மற்றும் மோகன்லாலின் 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' ஆகிய படங்கள் கடந்த 19 மற்றும் 20 தேதிகளில் அடுத்தடுத்து வெளியாகின.
இந்த ஸ்ட்ரைக்கால் தேங்கிய பிருத்விராஜின் 'எஸ்றா' படமும் வரும் பிப்-10ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.. இந்த ஸ்ட்ரைக்கால் பாதிக்கப்பட்ட இன்னொரு படம் தான் சித்திக் டைரக்சனில் ஜெயசூர்யா நடித்துள்ள 'பக்ரி'.. இந்தப்படம் எப்போது ரிலீசாகும் என தெரியாத சூழ்நிலை நிலவிய வேளையில், வரும் பிப்-3ஆம் தேதி இந்தப்படத்தை ரிலீஸ் செய்வதாக தற்போது அறிவித்துள்ளார்கள். இதில் ஜெயசூர்யாவின் கேரக்டர் பெயர் லக்கி.. அவர் ஒரு இஸ்லாமிய இளைஞனாக நடித்திருக்கிறார் என்று சொல்லப்பட்டாலும் படத்தின் ட்ரெய்லரில் அவர் சந்தனம் வைத்த நெற்றியுடன் காட்சியளிப்பது இது ஒரு ஆள் மாறாட்ட கதையாக இருக்கலாமோ என்கிற யூகத்தையும் ஆர்வத்தையும் கிளப்பிவிட்டுள்ளது.