தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒன்பது வருட இடைவெளிக்கு பின்னர் கைதி நம்பர் 150 படத்தின் வாயிலாக மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் ஹிட்டான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி நம்பர் 150 படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இயக்குனர் விவி விநாயக் இயக்கி கைதி நம்பர் 150 படம் வசூலிலும் லாபம் பார்த்து வருகின்றது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது நடிப்பில் திரைப்படம் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளதால்,சிரஞ்சீவி தனது மனைவி, மகள் மற்றும் மருகனுடன் சித்தூரில் உள்ள ஸ்ரீகாளகஸ்தி கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை மற்றும் பிரார்தனை செய்துள்ளார். சிரஞ்சீவியைக் காண ரசிகர் கூட்டம் கூடியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. காவலர்கள் உதவியுடன் சிரஞ்சீவி சாமி தரிசனம் செய்துவிட்டு கிளம்பி சென்றார்.