'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இன்றைய சினிமாவின் பெரும்பாலான எடிட்டர்கள் பலரும், டைரக்சன் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டு, வந்த இடத்தில் எடிட்டர் ஆனவர்கள் தானே.. அதனால் அவர்களுக்குள் உறங்கிக்கொண்டு இருக்கும் டைரக்டர் திடீரென ஒருநாள் வெளிப்பட்டு ரசிகர்களை திகைக்க வைக்கிறான். எடிட்டர் மகேஷ் நாராயணனும் அந்தவிதமாகவே இயக்குனராக அவதாரம் எடுத்து இருக்கிறார். கமலின் 'விஸ்வரூபம்', 'தூங்காவனம்', பிருத்விராஜின் 'என்னு நிண்டே மொய்தீன்' என இவர் படத்தொகுப்பு பண்ணிய இரண்டு, மூன்று படங்களே, இவர் எவ்வளவு திறமையான வேலைக்காரர் என்பதை நமக்கு சொல்லிவிடும். அந்த அனுபவங்களின் அடிப்படையில் தான் இவர் மலையாள சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார். படத்தின் பெயர் 'டேக் ஆப்'..
போர்க்காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்த மலையாள நர்ஸ்கள் எதிர்கொண்ட இன்னல்களையும் நெருக்கடி நிலையையும் பிரதானப்படுத்தி இவரது படம் உருவாகி இருக்கிறது.. இந்தப்படத்தில் கதாநாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்கிறார். நர்ஸ் வேடத்தில் பார்வதி நடிக்கிறார் இவர்களுக்கு இணையான வேடத்தில் தான் பஹத் பாசிலும் நடிக்கிறார். சமீபத்தில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பையும் ட்ரெண்டிங்கில் டாப் இடத்தையும் பிடித்துள்ளது..
குறிப்பாக இந்தப்படத்தில் படமாக்கப்பட்டுள்ள போர்க்கள காட்சிகள் சிலவற்றின் சாம்பிளை மட்டும் ட்ரெய்லரில் காட்டி படத்தின் பிரமாண்டத்தை உணர்த்தியுள்ளார் மகேஷ் நாராயணன்.. விஸ்வரூபம் படத்தில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. இதுபோன்ற காட்சிகள் பல மலையாள சினிமாவுக்கு ரொம்பவே புதுசு என சிலாகித்து பேசிவருகிறார்கள் மலையாள திரையுலக விமர்சகர்களும் ரசிகர்கள் பலரும்.