தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு வாரத்திற்கு முன் ஆரம்பித்து தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் கடந்த சில நாட்களாக உலக அளவில் அனைவராலும் பேசப்படும் பொருளாக மாறியது.. பலதரப்பிலும் இருந்து இதற்கு ஆதரவுகள் குவிந்தன. அந்தவகையில் மலையாள திரையுலகில் இருந்து மம்முட்டி, நிவின்பாலி, அஜு வர்கீஸ், வினீத் சீனிவாசன், ஜெயராம் உள்ளிட்டோர் தமிழ இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது தமிழ்நாட்டில் அனைவரிடமும் வரவேற்பை பெற்றது..
கேரளாவில் கூட பலரும் இவர்களது ஆதரவை பாராட்டினாலும் கூட, அதிலும் சில அதிருப்தியாளர்கள் இவர்கள் ஜல்லிக்கட்டுக்கு தந்த ஆதரவை விமர்சித்து வருகின்றனர். “கேரளாவில் நடைபெற்ற எத்தனையோ போராட்டங்களில், குறிப்பாக தெருநாய்கள் கடித்து பலர் பாதிக்கப்பட்ட நிகழ்வுகள் நடந்தபோதெல்லாம் இவர்கள் வாய்திறக்காதது ஏன்..? இப்போது மம்முட்டி, நிவின்பாலி, ஜெயராம் இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக பேசியிருப்பது தங்களது மார்க்கெட்டை தமிழ் சினிமாவில் வலுப்படுத்திக்கொள்வதற்காகத்தான்” என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.. இருந்தாலும் விமர்சிப்பவர்களின் எண்ணிக்கையை விட இவர்களின் ஜல்லிக்கட்டு ஆதரவு நிலைப்பாட்டை பாரட்டுபவர்களே அதிகம் இருக்கின்றனர்.