இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்சினிமாவில் அஜித் தனது படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுப்பது ஊரறிந்த விஷயம்.. அதேபோல மலையாள சினிமாவில் மம்முட்டியும் தனது படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுப்பதை தவறாமல் கடைபிடித்து வருகிறார். சமீபத்தில் ரஞ்சித் டைரக்சனில் மம்முட்டி நடித்துவரும் 'புத்தன் பணம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக கோழிக்கோட்டில் உள்ள மகாராணி ஹோட்டலில் படக்குழுனர் சுமார் 150 பேருக்கு பிரியாணி பார்ட்டி வைத்து அசத்தினார்.. இது மம்முட்டி கொடுக்கும் நூறாவது பிரியாணி விருந்து என்பது குறிப்பிடத்தக்கது..
இப்படி பிரியாணி விருந்து கொடுக்க மம்முட்டி தயரானதே சுவாரஸ்யமான விஷயம் தான்.. கடந்த இருபது வருடங்களுக்கு முன் மம்முட்டி மோகன்லால் இருவரும் 'ஹரிகிருஷ்ணன்ஸ்' என்கிற படத்தில் இணைந்து நடித்தனர். இந்தப்படத்தின் ஷூட்டிங்கில் மம்முட்டிக்கு வீட்டில் இருந்து தலைவாழை இழையுடன் சாப்பாடு அனுப்பிவைத்தாராம் மம்முட்டியின் மனைவி.. ஆனால் அந்த சாப்பாட்டை மோகன்லால் எடுத்து சாப்பிட்டு விட்டாராம். இதனால் அடுத்தநாள் ஐந்து பேருக்குண்டான சாப்பாடு மம்முட்டியின் வீட்டில் இருந்து வந்ததாம். அதற்கடுத்த நாட்களில் மம்முட்டியின் வீட்டு ஸ்பெஷல் சாப்பாடு சாப்பிட ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்ததாம். இதனால் ஷாக்கான மம்முட்டி, அப்போதிருந்து தனது படக்குழுவினருக்கு படம் முடிவதற்குள் ஒருநாள் தனியாக பிரியாணி விருந்தே கொடுக்க ஆரம்பித்தாராம். இதோ இப்போது அந்த பிரியாணி விருந்துதான் செஞ்சுரி அடித்திருக்கிறது.