பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
தமிழக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஜல்லிகட்டிற்காக போராடி வரும் சூழலில் தமிழ் திரை உலக நடிகர்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் டோலிவுட்டின் யங் சூப்பர் மகேஷ் பாபு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மகேஷ் பாபு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. தமிழர்களின் தைரியம் மற்றும் துணிச்சலின் அடையாளம். தமிழர்கள் தங்கள் பாரம்பரியத்திற்காக ஒன்றிணைந்து போராடி வருவது அதிலும் குறிப்பாக தமிழக மாணவர்களது ஓயாத போராட்டம் பெருமிதம் கொள்ளச்செய்கின்றது. ஜல்லிக்கட்டிற்காக போராடி வரும் தமிழக மக்களுக்கு தானும் துணை நிற்பதாக குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ஆக்ஷன் திரில்லரில் மகேஷ் பாபு தற்போது நடித்து வருகின்றார். தமிழகத்தில் பிறந்து வளர்ந்த மகேஷ் பாபு சென்னையில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.