தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு திரைப்படம் எவ்வளவு வசூலிக்கிறது என்பதை அதிகாரப்பூர்வமாக இதுவரை யாரும் அறிவிக்கவில்லை. தோராயமாக இத்தனை கோடி, அத்தனை கோடி என சமூக வலைத்தளங்களில் அந்தப் படத்திற்கு சம்பந்தமில்லாத யாரோ சிலர் பதிவிடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
ஆனால், முதல் முறையாக ஒரு படத்தின் வசூல் இவ்வளவு என்பதை அறிவிக்கப் போகிறார்கள். சிரஞ்சீவி நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'கைதி நம்பர் 150' படம் ஒரு வாரத்தைக் கடந்துவிட்டது. இன்று மாலை இந்தப் படத்தின் ஒரு வார வசூல் என்ன என்பதை படத்தின் தயாரிப்பாளரான ராம் சரண் அறிவிக்க உள்ளாராம்.
இந்தப் படம் தெலுங்குத் திரையுலகில் அதி வேகமாக 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல சென்டர்களில் 'பாகுபலி' படத்தின் வசூலையும் மிஞ்சியுள்ளதாம். தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற 'கத்தி' படத்தின் ரீமேக்கான 'கைதி நம்பர் 150' படம் தமிழில் வசூலித்ததை விட பல மடங்கு தெலுங்கில் வசூலித்து வருகிறது. இதற்கெல்லாம் காரணம் சிரஞ்சீவி மட்டுமே என தெலுங்குத் திரையுலகினரும் கொண்டாடி வருகிறார்கள். தெலுங்குத் திரையுலகிற்கு இந்தப் படம் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.