ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள திரையுலகில் தியேட்டர் ஸ்ட்ரைக் போல கடந்த ஒரு மாதமாக இன்னொரு விஷயமும் அவ்வப்போது விட்டுவிட்டு புகைந்துகொண்டு இருக்கிறது.. கடந்த மாதம் கேரள சர்வதேச திரைப்பட விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தாத சிலரை, அரங்கத்தில் நுழைந்து போலீசார் கைது செய்தனர். இதற்கு விழாக்கமிட்டியின் நிர்வாக சேர்மனும் பிரபல இயக்குனருமான கமல் கண்டனம் தெரிவித்தார். அவர் இஸ்லாமியர் என்பதால், இந்துத்வா அமைப்புகள் அவருக்கு எதிராக நேரிலும் சோஷியல் மீடியாவிலும் தங்களது எதிர்ப்பை முறையாகவும் முறையற்ற வகையிலும் தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் பிஜேபி கட்சியின் கேரளா மாநில பொதுச்செயலாளரான ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்குனர் கமலை “இங்குள்ள சட்டதிட்டங்கள் பிடிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்” என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என கூறி இயக்குனர் கமலுக்கு ஆதரரவாக திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். அதில் லேட்டஸ்டாக மலையாள குணச்சித்திர நடிகரான அலான்சியர் லே வித்தியாசமான முறையில் இந்துத்வா அமைப்புக்கு எதிராக தனது எதிர்ப்பை கட்டியுள்ளார். இரண்டு தினங்களுக்கு முன் பிஜேபி கட்சிக்கு அதிகம் ஆதரவாளர் உள்ள பகுதியான காசர்கோடு சென்ற அலான்சியர் அங்கே அமெரிக்க கொடியை கோவணமாக கட்டிக்கொண்டு, ஒரு வேட்டியை மட்டும் உடுத்திக்கொண்டு, மஞ்சப்பையுடன் பஸ் ஏறி அமெரிக்கா போவதுபோல ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். கூடவே சகிப்புத்தன்மை குறித்த பாடலையும் பாடியுள்ளார்.. முன்னணி நடிகர்களே இயக்குனர் கமல் விவகாரத்தில் மௌனம் காக்கும்போது, இவரது வித்தியாசமான எதிர்ப்பு அணுகுமுறை குறித்து பலரும் இவருக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.