ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் |
கேரளாவில் தற்போது ஒரு படம் திரையிடப்பட்டால் அதன் வசூலில் தயாரிப்பாளர்கள் 60 சதவிகிதமும், தியேட்டர் அதிபர்கள் 40 சதவிகிதமும் பிரித்துக் கொள்வார்கள். தற்போது தியேட்டர் அதிபர்கள் தங்களுக்கு 50 சதவிகிதம் தரவேண்டும் என்று கேட்டனர். இதற்கு கேரள திரைப்பட திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் தியேட்டர் அதிபர்கள் போராட்டம் அறிவித்தனர். புதுப்படங்களை திரையிடாமல் இருந்து வந்தனர். இதனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு வர வேண்டிய பல பெரிய நட்சத்திரங்களின் படங்கள் முடங்கியது. மலையாள திரையுலகமே ஸ்தம்பித்தது. இரு தரப்புக்கும் பலசுற்று பேச்சுவார்த்தை நடந்தும் தீர்வு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் "கேரள அரசு இந்த பிரச்சினையை கையிலெடுத்து சரியான நிலைப்பாட்டை எடுக்கும். தியேட்டர் அதிபர்கள் தன்னிச்சையாக போராட்டம் நடத்துவது சரியல்ல. அவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்" என்ற வேண்டுகோள் விடுத்தார். முதல்வரின் இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து தியேட்டர் அதிபர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.