மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மலையாள சினிமாவின் ஜனப்ரிய நாயகன் திலீப் சினிமாவிற்கு ஒதுக்கிய நேரம் போக, தனது மீதி நேரம் மற்றும் பணம் என இரண்டையும் சமூக நோக்கிலான நல்ல காரியங்களுக்கு ஒதுக்கி உதவி வருகிறார்.. இதற்காகவே தந்தையின் பெயரில் சிபி பவுண்டேஷன் என்கிற அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.. இந்த புது வருடத்தில் முதல் நடவடிக்கையாக, அதிக செலவிலான கண்பார்வை சிகிச்சை தேவைப்படும் நிலையில் உள்ள 100 பேருக்கு 50 லட்சம் செலவில் கண் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார் திலீப்.. இந்த சிகிச்சையை திலீப்பிற்கு சொந்தமான கண் மருத்துவமனையே இலவசமாக அளிக்க இருக்கிறது.
இதற்கான அறிவிப்பு விழா நேற்று சாலக்குடியில் உள்ள லயன்ஸ் கிளப்பில் நடைபெற்றது.. இந்த விழாவில் பேசிய திலீப் நெகிழ்ச்சியுடன் தனது வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார்.. “நான் சினிமாவுக்கு வருவதற்குமுன் ஒருநாள் எனது அம்மா சமையற்கட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது அவரது கண்களில் தூசு விழுந்தது.. சின்ன விஷயம் தானே சரியாகிவிடும் என நினைத்தால், அது பெரிதாக மாறி, அவருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தி, இறுதியாக ஒரு கண்ணின் பார்வையையையும் பறித்துக்கொண்டது. பின் நான் சினிமாவிற்கு வந்து பணம் வந்ததும் என் தாய்க்கு கண் சிகிச்சை அளித்து அவரது பார்வையை மீட்டேன்.. ஆனால் அந்த நாட்களில் அவர் பட்ட வேதனை என்னை நீண்ட நாட்களாகவே உறுத்தி வந்தது.. அதனால் இப்போதும் கூட பார்வையற்ற யாரை பார்த்தாலும் எனது தாய்தான் ஞாபகத்துக்கு வருவார். எனவே தான் கண் பார்வை இழந்தவர்களுக்காக இந்த இலவச சிக்கிச்சை அளிக்கும் நடவடிக்கையை துவங்கியுள்ளேன்” என கண் கலங்க பேசினார் திலீப்.