இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது 149வது படத்திற்கு பின்னர் அரசியல் பிரவேசம் மேற்கொண்டார். தற்போது அரசியல் ஓய்வு எடுத்துள்ள சிரஞ்சீவி ஒன்பது வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி குண்டூரில் நடைபெற்றது. மெகா குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் டோலிவுட் பிரபலங்களுடன் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய சிரஞ்சீவி நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்ட கைதி நம்பர் 150 பட டிரைலரில் இடம்பெற்ற வசனங்களைப் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் ரசிகர்களின் இத்தகைய கரகோஷங்களை கேட்க ஒன்பது வருடங்களாக காத்திருந்ததாக நெகிழ்ச்சியுடன் கூறினார். ரசிகர்களின் கைத்தட்டல்களே எதையும் சாதிக்கும் துணிச்சலை கலைஞர்களிடம் உருவாக்குகின்றது என கூறிய சிரஞ்சீவி, கைதி நம்பர் 150 படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களும் சக நடிகர்களும் சிறப்பாக பணியாற்றியதாக பாராட்டினார்.
இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் சிரஞ்சீவி மகனும் நடிகருமான ராம் சரண் தயாரித்துள்ள இப்படம், தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்காகும். சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ஏற்கனவே வெளிவந்து வெற்றி அடைந்துள்ளன. பொங்கலை முன்னிட்டு இப்படம் எதிர்வரும் ஜனவரி 11ல் வெளிவரவுள்ளது.