ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் |
மலையாள திரையுலகம் தியேட்டர்காரர்கள் அதிக பங்கு கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளதால் கடந்த இருபது நாட்களுக்கு மேலாக ஸ்தம்பித்து போயுள்ளது.. அதனால் கிறிஸ்துமஸ் பண்டிகை உட்பட கடந்த சில வாரங்களாக எந்த படமும் ரிலீசாகவும் இல்லை. இதுநாள் வரை தயாரிப்பாளர்களுக்கு 60%, தியேட்டர்காரர்களுக்கு 40% என்கிற நிலை இருந்தது வந்தது.. ஆனால் இனி தங்களுக்கு 50% வேண்டும் என பிடிவாதம் காட்டுகின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.. இந்நிலையில் தியேட்டர்களுக்கு கொடுக்கப்படும் பங்கை 30 சதவீதமாக குறைக்கவேண்டும் என அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார் பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன்..
“50% பங்கு வேண்டும் என கேட்கும் எத்தனை தியேட்டர்கள் தரமானதாக உள்ளன.. இருக்கை வசதிகள், அடிப்படை வசதிகள், தொழில் நுட்பம் என பல தியேட்டர்கள் கடந்த காலத்திலேயே இருக்கின்றன.. இவர்களுக்கு எதற்காக 50% கொடுக்கவேண்டும்.. இவர்களது போராட்டத்தால் தயாரிப்பளர்களின் பணம் முடங்கியது தான் மிச்சம். கேரள முதல்வர் பினராயி விஜயன் தாமாகவே இந்த விஷயத்தில் தலையிட்டு நல்ல தீர்மானம் ஒன்றை கொண்டுவர வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்.