பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தமிழில் எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற படங்களில் நடித்த தெலுங்கு நாயகன் சர்வானந்த் தற்போது, சதமானம் பவதி எனும் தெலுங்கு படத்தில் நடித்து வருகின்றார் சர்வானந்திற்கு ஜோடியாக அனுபமா பரமேஷ்வரன் நடித்துள்ள இப்படத்தை புதுமுக இயக்குனர் சதீஷ் இயக்கியுள்ளார். பிரகாஷ் ராஜ் தாத்தாவாகவும் ஜெயசுதா பாட்டியாகவும் நடித்துள்ள இப்படம் கூட்டு குடும்ப கதைக்களத்தில் உருவாகியுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ இப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ல் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150 திரைப்படம் ஜனவரி 11லும் பாலகிருஷ்ணாவின் 100வது திரைப்படமான கௌதமிபுத்ர சடர்கனி திரைப்படம் ஜனவரி 12லும் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. டோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இரண்டு பெரிய பட்ஜெட் படங்களுடன் சர்வானந்தின் சதமானம் பவதி திரைப்படமும் மோதவுள்ளது டோலிவுட் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.